திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு-2 மர்ம நபர்களுக்கு வலை…!
திருச்சி, தாராநல்லூர் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் நரேன். இவரது மனைவி கீர்த்தனா (வயது 34).இவர் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஏபி நகர் 2வது தெருவில் உள்ள தங்கை வீட்டிற்கு பஸ்சில் வந்து வீட்டின் அருகில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கீர்த்தனா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் கீர்த்தனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.