திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மின் தூக்கி (லிஃப்ட்), ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் திரவ பிராணவாயு கொள்கலன், ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு இயந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி ,மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
