நாளை மகாவீர் ஜெயந்தி. அரசு விடுமுறை .புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு – சமண சமயத்தின் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரராகப் போற்றப்படும் மகாவீரர் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழும் ஜெயின் சமுதாய மக்களுக்கும் அவரது அறநெறிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மகாவீரர் அன்பையும், மனிதநேயத்தையும் அகிம்சையையும் போதிக்கும் உன்னத கோட்பாட்டை உலகிற்கு வழங்கிய, சமண சமயத்தின் திருவுருவமாகவே வாழ்ந்தவர் மகாவீரர். அவர் அவதரித்த இந்த நன்னாளில், அவர் போதித்த அகிம்சை வழியையும், அன்பு வழியையும் நாம் அனைவரும் நமது வாழ்வில் பின்பற்ற வேண்டும்; அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதை நம் அடிப்படைப் பண்பாக மாற்றிக்கொள்ள உறுதியேற்க வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.