Rock Fort Times
Online News

திருச்சி அரியமங்கலம், காந்தி மார்க்கெட் பகுதிகளில் போதை ஊசி, மாத்திரைகள் விற்றதாக 6 பேர் கைது…!

திருச்சி, அரியமங்கலம் காமராஜ் நகர் கரை பகுதியில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களை சோதனை செய்தபோது  22 போதை மாத்திரைகள், 2 போதை ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அரியமங்கலம் காமராஜ் நகர் அப்துல்லா தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடி ராகவேந்திரா (24), திருச்சி திடீர் நகர் மேல அம்பிகாபுரம் கலைஞர் தெரு பகுதியைச் சேர்ந்த அஜய் (24 ), அதே பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் என்கிற சதாம் உசேன் (32), அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முருகன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (19), அரியமங்கலம் காமராஜ் நகர் சாமிநாதன் தெரு பகுதியை சேர்ந்த தீபக் (19) என்பது தெரிய வந்தது. அவர்களில் அஜய், சதாம் உசேன் ஆகிய இரண்டு பேரும் ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இதேபோல, காந்தி மார்க்கெட் போலீசார், எடத்தெரு பகுதியில் போதை மாத்திரை  விற்றதாக வடக்கு தாராநல்லூர் சாமிநாதன் பிள்ளை ஸ்டோர் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (26)  என்பவரை கைது செய்தனர்.  அவரிடம் இருந்து 9 போதை மாத்திரைகள், இரண்டு ஊசி மற்றும் இரண்டு மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.  இதுதொடர்பாக காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்