Rock Fort Times
Online News

தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்…!

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று(14-10-2024) உருவாக வாய்ப்பு உள்ளது. இது வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு  திசையில் நகர்ந்து, நாளை மற்றும் நாளை மறுதினம் புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் அடுத்த  4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்தநிலையில் இன்று தமிழகத்தில் 21 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,  கரூர், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்