Rock Fort Times
Online News

திருச்சியில் நகைக்காக ஒருவர் கடத்தல்: ஏழு பேர் கும்பலில்ஒருவர் சிக்கினார்!

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாட்சா . திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஒரு பயணியிடம் நகையை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் தென்னூர் பகுதியில் வந்த போது சாதிக் பாஷாவை தாக்கி நகையையும், அவரையும் கடத்தி சென்றனர். அப்போது சாதிக் கூச்சலிட்டார். அப்போது அப்பகுதியில் இருந்த மக்கள், கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கடத்தல் கும்பலை சேர்ந்த அந்த நபரை ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருச்சி அரியமங்கலம் பகுதி சேர்ந்த கதிரேசன் என்பதும், இவருடன் சேர்த்து ஏழு நபர்கள் சாதிக் பாஷாவை கடத்தி அவர் வைத்திருக்கும் நகைகளை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்