வேலூர் மாவட்டம், அரக்கோணம் சுவால்பேட்டை, காந்திரோடு பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி (45). இவர் அரக்கோணத்தை அடுத்த வளர்புரத்தில் அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் பவித்ரா (25). திருமணம் ஆகாதவர். மீனாட்சியின் மகன் யுவனேஷ் (20). அரக்கோணம் அருகே உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இன்று(07-09-2024) காலை இவர்களது வீடு, நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. அருகில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், அரக்கோணம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மீனாட்சி மற்றும் அவரது மகள், மகன் மூவரும் தனித் தனியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. பின்னர், அவரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்கள் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.