Rock Fort Times
Online News

திருச்சி, உறையூரில் 14 வயது சிறுவன் பைக் ஓட்டி விபத்து ! கேபிள் கம்பத்தில் மோதியதில் ஒருவர் பலி!

திருச்சி, உறையூர் ராமலிங்கநகர் 8 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ்கான். இவரது மகன் அகமத் (வயது 14 ). அதே பகுதி அகமது காலனியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகன் முகேஷ் (வயது 14 ) இருவரும் மோட்டார் சைக்கிளில் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அகமத் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் இவர்கள் சென்ற கம்பத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் முகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்