Rock Fort Times
Online News

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 583 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட 583 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதமாக ரூ.2,50,500/- விதித்து  சேலம் மாநகராட்சி சுகாதாரத்தை நடவடிக்கை எடுத்துள்ளது. சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முழுவதுமாக தடுக்கும் வகையில் மாநகராட்சி ஆணையாளர்  தா.கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் 1.3.2023 முதல் 30.3.2023 முடிய கடந்த ஒருமாத காலத்தில் மட்டும் சுகாதார பிரிவு அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 500கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்ததோடு அபராதமாக ரூ.2,25,500/- விதிக்கப்பட்டுள்ளது, மேலும் குமரகிரி ஏரி சாலையில் இயங்கி வந்த பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 83 கிலோ பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட அட்டைக்கப்புகள் பறிமுதல் செய்து அபராதமாக ரூ.25 ஆயிரம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகர நல அலுவலர் யோகானந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அழிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் உடனிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்