Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதியில் 10-ம் தேதி ஒரு நாள் குடிநீர் வினியோகம் ரத்து…!

திருச்சி  கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை  (09-07-2024 )மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இதன் காரணமாக நாளை மறுநாள்(10.07.2024)  திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும்  அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் இருக்காது.  11-ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.  எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் வி. சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்