திருச்சி நவல்பட்டு அருகே துப்பாக்கி தொழிற்சாலை இயங்கி வருகிறது.திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இருந்து துப்பாக்கி தொழிற்சாலையை இணைக்கும் அணுகுசாலை, நவல்பட்டு கிராமத்தில் இருந்து பர்மாகாலனி வழியாக துப்பாக்கி தொழிற்சாலையை இணைக்கும் அணுகு சாலை உள்ளது. அங்கு மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அனைத்து அணுகு சாலைகளையும் துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு பிரிவு பணியாளர்கள் வருகிற 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். புதுக்கோட் டை பிரதான சாலையுடன் தொழிற்சாலையை இணைக்கும் அனைத்து அணுகு சாலைகளையும் பொதுமக்கள் உபயோகிக்க வேண்டாம். அந்த வழியான பயணத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அகநகர் உதவி பணி மேலாளர் தேவேந்திரன்செய்தி குறிப்பில் கூறியுள்ளார்