திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் முகமது ஜமீர் (வயது 43). இவர் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். குடமுருட்டி ரயில்வே கேட் அருகில் வந்த போது மூன்று மர்ம நபர்கள் முகமது ஜமீரை வழிமறித்து அவரை தாக்கி செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து முகமது ஜமீர் உறையூர் குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.