Rock Fort Times
Online News

லால்குடி அருகே வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை…!

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஒரத்தூர் கிராமத்தில் உள்ள வடக்குப்பட்டி தோட்டத்தில் வசிப்பவர் கணேசன்(72). இவரது மனைவி தைலம்மை(65). விவசாயியான கணேசன், தைலம்மை தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில், 2 மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். ஒருவர் உள்ளூரில் வசித்து வருகிறார். தம்பதி இருவரும் நேற்று(13-02-2024) இரவு வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.30 மணி அளவில் அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வயதான தம்பதியினரை தாக்கி கட்டி போட்டுவிட்டு வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ.15,000 ரொக்கம் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இன்று காலை, தம்பதி தாக்கப்பட்டு கிடப்பதைக் கண்ட அப்பகுதியினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்