சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணத்திற்கு கோவிலுக்கு செல்வதற்காக ஓம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்து வந்தனர்.
இதேபோன்று மரக்கட்டைகளை லாரியில் ஏற்றுக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்றபோது திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து திருவாசி அருகே அதிகாலை 3.50 மணிக்கு எடப்பாடியில் இருந்து வந்த ஓம்னி வேணும், லோடு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை, ஒரு பெண், 4 ஆண்கள் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வாத்தலை போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் 6 பேர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார்.
இந்த விபத்தினால் திருச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருந்தது. காவலர்கள் அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்