Rock Fort Times
Online News

உருமாறிய கொரோனா வைரஸால் டிசம்பர் மாதத்தில் 10 ஆயிரம் பேர் பலி- உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்…!

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் மக்கள் பெரும் துயரை சந்தித்தனர். வருடக்கணக்கில் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசிகள் போன்றவற்றால் இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தற்போது ஜே.என்.1 என உருமாறி மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரசால் பெரிய அளவில் அளவில் பாதிப்பு இல்லை. இணை நோய் உள்ளவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிந்து செல்லுமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் உலக சுகாதார மையம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில், கோவிட் ஜே.என் .1 பாதிப்பு மிக கவலை அளிக்கிறது. விடுமுறை காலம் மற்றும் மக்கள் அதிகம் கூடுதல், பருவ சூழல் மாறுபாடுகளால் இந்த பாதிப்புக்கு காரணம் என அறியப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் அதாவது டிசம்பர் மாதத்தில் மட்டும் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர்.
50 நாடுகளில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குளிர்காலம் என்பதால் கோவிட் வேகமாக பரவி இருக்கிறது. இந்த தாக்கம் ஜனவரி மாதம் இறுதி வரை இருக்கலாம் என தெரிகிறது. ஆகவே, பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
வெளி இடங்களுக்கு சென்று வந்தவுடன் கை, முகங்களை நன்றாக கழுவ வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்