Rock Fort Times
Online News

ஆட்டோ டிரைவர் சுடுதண்ணீர் ஊற்றி கொலை – திருவெறும்பூரில் மனைவி, மாமியார் கைது

பெண்களிடம் பலான விஷயங்களில் சில்மிஷம் செய்தால் அயல்நாடுகளில் தண்டனை ஒரு விதமாக இருக்கும். அதுவும் இப்படியும் நடக்குமா? என்று அதிர்ச்சி தரும் தண்டனையாக இருக்கும் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுவும் நம்ம ஊர் என்றால் மக்களே தாக்கி தண்டனை கொடுத்து விடுகின்றனர். சில இடங்களில் ருசிகர தண்டனையும் உண்டு. அதுபோன்ற சம்பவம் திருச்சி அருகே நடந்துள்ளது. திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.(27) ஆட்டோ டிரைவர். அவரது மனைவி டயானாமேரி(22). மனைவியுடன் வசித்து வந்த செல்வராஜ் தனது மாமியார் இன்னாசியம்மாள் (40)மீது அடிக்கடி காம பார்வை வீசி வந்தார். இதை அடிக்கடி அவரது மனைவி டயானா கவனித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் தனது மாமியாரிடம் பலான விஷயத்திற்கு கட்டுப்படும் படி சில்மிஷத்தில் ஈடுபட்டார். இந்த விஷயத்தை தனது மகளிடம் அதாவது செல்வராஜ் மனைவியிடம் போட்டுக் கொடுத்தார். எத்தனை கண்டித்தாலும் செல்வராஜ் கட்டுப்படவில்லை . ஒரு வழியாக அம்மாவும், மகளும் ஒரு முடிவுக்கு வந்தனர் . கடந்த 6ம் தேத சூடாக வெந்நீர் போட்டு அதில் மிளகாய் பொடியை கலந்து அந்த கரைசல் வெந்நீரை செல்வராஜ் மீது ஊற்றி விட்டனர். துடிதுடித்த செல்வராஜ் துவாக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி திருவெறும்பூர் போலீசார் இறந்து போன ஆட்டோ டிரைவர் செல்வராஜின் மனைவி, மாமியார் ஆகியோரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்