கோவையில் வீடியோ வெளியிட்ட வினோதினி என்ற தமன்னாவை போலீசார் தேடி வந்தனர். அதேபோல கஞ்சா வழக்கிலும் தேடி வந்தனர். இதில் கடந்த 2021 ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் வினோதினி என்ற தமன்னா மற்றும் சூரிய பிரசாத் ஆகியோர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வினோதினி என்ற தமன்னா நீதிமன்றத்தில் வாய்தாவிற்கு தொடர்ந்து ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி தமன்னாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தமன்னாவை தேடி வந்த நிலையில் இன்று காலை சங்ககிரி பகுதியில் கைது செய்தனர். பின்னர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இன்றியமையா பண்டகங்கள் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்தினர். இந்த நிலையில் அவரை விசாரித்த நீதிபதி லோகேஸ்வரன் வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்திஇருக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் போலீசார் வினோதினியை சிறையில் அடைத்தனர். வினோதினி ஆறு மாத கர்ப்பிணி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.