திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு ஆண் பயணி கொண்டு வந்த கைப்பையை சோதனை செய்ததில் அதில் மறைத்து கொண்டுவரப்பட்ட 5ஆயிரம் பவுன்ஸ் ஸ்டெர்லிங், 2500 யூரோ கரன்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மதிப்பு சுமார் 7 லட்சத்து 3ஆயிரத்து 750 ரூபாய் என தெரிவித்தனர்.