நிரந்தர ஆசிரியராக பணியமரத்த ரூபாய் 8,000 லஞ்ச வாங்கிய வழக்கில் தொடக்கக்கல்வி அலுவலர் வள்ளியப்பன், கண்காணிப்பாளர் வரதராஜன் ஆகியோருக்கு தலா 3 வருடம் சிறை தண்டனையும் ,தலா 20,000 அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.திருச்சி, திருவெறும்பூர் . கைலாசபுரம்,தமிழ் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஞான செல்வி தொடுத்த வழக்கின் அடிப்படையில் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.