யானை பாகன்களுக்கு ரூ 9.10 கோடியில் வீடுகள். முகாம் பணியாளர்களுக்கு தலா ரூ.1லட்சம் பரிசு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு .
நீலகிரியில் யானை பாகன்களுக்கு வீடுகள் கட்ட ரூ.9.10 கோடியும், ஆனைமலையில் உள்ள கோழிக முத்து யானைகள் முகாம் பணியாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ‘வுhந நுடநிhயவெ றூiளிநசநசள’ ஆவணப் படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அதில் நடித்த ரகு யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன் பெல்லி தம்பதியினர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அ வர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து பாராட்டுப் பத்திரமும் பொன்னாடையும் அணிவித்தார்.மேலும் தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார். அப்போது கோவை நீலகிரியில் யானை பாகன்கள் வசிக்க உகந்த வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அறிவித்துள்ளார். யானை பராமரிப்பாளர்கள் வசிக்க தேவையான சுற்றுசூழலுக்கு ஏற்ற வீடுகள் கட்ட நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. முதுமலை தெப்பக்காடு ஆனைமலை கோழிகமுத்து யானை முகாமில் உள்ள 91 பணியாளர்கள் பயனடைய நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனைமலையில் உள்ள யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவையில் அடிப்படை வசதிகளுடன் ரூ.8 கோடி செலவில் புதிய யானைகள் முகாம் அமைக்கப்படும் என்றார். ஆனைமலையில் உள்ள கோழிகமுத்து யானைகள் முகாம் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.