திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்து பெற்றது ஆகும். இங்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்நிலையில் இந்த மாத அமாவாசை வருகிற 12 ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.23 மணிக்கு தொடங்கி மறுநாள் 13 ந்தேதி புதன்கிழமை அதிகாலை 5.49 மணிக்கு முடிகிறது. எனவே, இந்த நேரத்தில் பக்தர்கள் அமாவாசை தரிசனம் செய்யலாம் என கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.