Rock Fort Times
Online News

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு பணி நியமன ஆணை வழங்கல்.

திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி, கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினர்.

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மண்டல இணை இயக்குநர் மு.சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.சந்திரமோகன், துணை இயக்குநர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் திருமதி.ஐ.மகாராணி, உதவி இயக்குநர் திருமதி.கங்காதரணி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன், மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்..

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்