Rock Fort Times
Online News

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் சம்பந்தப்பட்ட சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (28-11-2023) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்த மருத்துவக் காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவக் காரணங்களுக்கான ஜாமீன் மனுவை திரும்பப் பெறுவதாகவும், கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கடந்த அக்டோபர் 19-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்