தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று
தொடங்கி வரும் 3 ம் தேதி வரை நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் 260 பள்ளிகளை சேர்ந்த 34,392 மாணவ மாணவியர், 133 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். மாணவ மாணவியர் அனைவரும் காலை 9 மணி வரை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் இருக்கை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கான மின்சார வசதி மற்றும் போக்குவரத்து வசதியும் அந்தந்த துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 133 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 133 துறை அலுவலர்கள், 20 வினாத்தாள் கட்டுப்பாளர்கள், 30 வழித்தட அலுவலர்கள், 265 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள், 2407 தேர்வறை கண்காணிப்பாளர்கள் 229 சொல்வதை எழுதுபவர்கள். மற்றும் 275 அலுவலகப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..