பசும்பொன் முத்துராமலிங்க தேவாின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிா்வாகிகள் வரகனேரி பார்த்திபன், வழக்கறிஞர் கார்த்திகேயன், ஏ.என்.எம்.அழகேசன், ஒண்டி முத்து, காளீஸ்வரன், பொன். தண்டபாணி, கள்ளிக்குடி ராஜேந்திரன், சுவேந்திரன், பங்களா சக்திவேல், எஸ்.ஆர்.ராஜேஷ், பழனிக்குமார், முரளி, சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.