பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று ( 23.10.2023 ) இரவு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் அருகே, திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பேட்டை கூட்டு சாலையில் வந்த போது எதிரே வந்த கார் ஒன்று அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த டிஐஜி முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். செங்கம் உட்கோட்ட காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னா் விபத்தில் படுகாயம் அடைந்தவா்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விபத்தில் உயிாிழந்தவா்களின் உடல்கள் பிரேத பாிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காரில் 11 பேர் பயணம் செய்துள்ளனர். விபத்தில், உயிரிழந்தவர்கள் 5 பேரின் விவரம் வருமாறு; கிருஷ்ணகிரி மாவட்டம் கேளமங்கலத்தை சேர்ந்த புனித்குமார், ஊத்தங்கரை, மாரப்பட்டியை சேர்ந்த காமராஜ், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் கோரோ, பிஷேஸ் மூர்மு, சீமோன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த இருவரின் அடையாளம் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.