திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 5, வார்டு எண் 23 உறையூர் பாளையம் பஜார் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேயர் மு.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா். இந்த ஆய்வின்போது மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், உதவி ஆணையர் சதீஸ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.