திருச்சி மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் கள்ளிக்குடி மார்க்கெட் வாசலில் நின்ற ஒருவர் வெள்ளை சாக்குப்பையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர், கண் தீனதயாள் நகரை சேர்ந்த நைனா முகமது (வயது 50) என்பதும், மொத்தமாக கஞ்சா வாங்கி பதுக்கி வைத்து சில்லரை வியாபாரிகளுக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.