பேரறிஞர் அண்ணா பற்றி சில கருத்துக்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதால் அ.தி.மு.க. -பா.ஜ.க.கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் பாஜக மேலிடத்தில் வலியுறுத்தினர். ஆனால், அதனை ஏற்க பாஜக மேலிடம் மறுத்துவிட்டது. இந்நிலையில் சென்னையில் நாளை( திங்கட்கிழமை) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாலை 3 -45 மணிக்கு நடக்கிறது. இதில், கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பாஜகவுடன் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.