Rock Fort Times
Online News

ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 5 பவுன் நகை, பணம் திருட்டு…

தேனி மாவட்டம் செட்டிப்பட்டி குருசாமி தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி சுமதி ( 40) திருச்சி காந்தி மார்க்கெட்டில், மத்திய பேருந்துநிலையம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளாா். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் தனது பையில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 3,500 ரூபாய் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சுமதி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி வருகின்றனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்