Rock Fort Times
Online News

திருச்சியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் : 23-ம் தேதி நடக்கிறது…

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 23-ம்தேதி திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்தெடுக்கின்றனர். முகாமில் 10ம்வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, செவிலியர், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் , முடித்தவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களுடன் ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.  இதற்கான வயது வரம்பு  18  முதல் 40 வயதாகும்.  மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்