Rock Fort Times
Online News

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி: உடலை வாங்க மறுத்து போராட்டம்…

திருச்சி வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் டேவிட் ரீகன். கட்டிட தொழிலாளியான இவர், சம்பவத்தன்று திருச்சி கருமண்டபம் நியூ ஆல்பா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டேவிட் ரீகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன ரீகனுக்கு மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரீகன்  இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ரீகன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில் உள்ள ரீகன் உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனைக்கு   விரைந்து சென்ற போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்