Rock Fort Times
Online News

மீண்டும் எம்.பி.ஆனார் ராகுல் காந்தி…! மக்களவை செயலகம் அறிவிப்பு…

பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால், அவரது எம்.பி.பதவி பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாக தொடரலாம் என மக்களவை செயலகம் உறுதி செய்திருக்கிறது. இதனால், மோடி அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்திக்கு எம்.பி பதவியை மீண்டும் வழங்கி லோக்சபா செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்