மலேசியாவில் இருந்து தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பயணிகள் இருவர் தங்கள் உடல் மற்றும் உடைமைகளில் 1,188 கிராம் தங்கத்தை பசை வடிவில் மாற்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மூலம் தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. அதன் மதிப்பு 71.72 லட்ச ரூபாயாகும். இதுதொடர்பாக சுங்கத்துறையினர் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.