திருச்சி மாவட்டம் புலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட வெள்ளகல்பட்டி பகுதியில் வசிப்பவர் தண்டாயுதம்(55). இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு நித்யா என்ற மகளும், ரமேஷ் என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று தண்டாயுதம், அவரது மனைவி சந்திரா மருமகள் மீனா என்கிற காயத்ரி ஆகியோர் ஆடுகளை மேய்ப்பதற்காக வெளியே சென்றிருந்தனர். மாலை, வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகை மற்றும் ரொக்கம் 15 ஆயிரம் ஆகியவை திருட்டுப் போயிருந்தன.
இதுகுறித்து புலிவலம் போலீசில் தண்டாயுதம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இப்பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், இப்பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.