நடிகர் கருணாஸிடமிருந்து கைப்பற்றப்பட்ட 40 துப்பாக்கி குண்டுகள் ! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !
சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் பயணிக்க இருந்த நடிகர் கருணாஸிடமிருந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி செல்வதற்காக அவர் வந்த நிலையில், உடைமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது, குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாக அவர் கூறியுள்ளார். விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த பாதுகாப்பு படையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.