Rock Fort Times
Online News

திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தில் சிறுமியிடம் அத்துமீறிய 4 காவலர்கள் போக்சோவில் கைது…

திருச்சி  எஸ்.பி அதிரடி நடவடிக்கை..

திருச்சி ஜீயபுரம் அருகே முக்கொம்பு மேலணை உள்ளது.  இங்கு பொது மக்களுக்காக சுற்றுலா மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா மையத்திற்கு திருச்சி மட்டுமன்றி அருகில் உள்ள மாவட்ட மக்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று ( 04.10.2023 ) திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு ஆண் நண்பருடன்   17 வயது சிறுமி சென்றாா். அப்போது   4  காவலா்கள்  மது அருந்தியதை அவா்கள் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 4  காவலா்களும் அந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீ.வருண்குமாா் ஐபிஎஸ்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  மேலும் ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இது தொடா்பாக விசாாித்து நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி. வருண்குமாா்   உத்தரவிட்டதன் பேரில், ஜீயபுரம்  போலீசார்  விசாரணை நடத்தினா். விசாரணையின் அடிப்படையில்  காவல் உதவி ஆய்வாளா் சசிகுமாா் , நவல்பட்டு காவல் நிலைய போலீஸ் பிரசாத்,  துவாக்குடி காவல் நிலைய போலீஸ்  சித்தார்த், காவலா் சங்கர பாண்டியன் ஆகிய 4 போ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அவா்கள்  4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவலா்கள் 4 போ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம்  காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிறுமியிடம் அத்துமீறிய காவல் உதவி ஆய்வாளா் உள்பட நான்கு காவலா்களையும் பணியிடை நீக்கம் செய்து   எஸ்.பி உத்தரவிட்டாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்