Rock Fort Times
Online News

3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை …

திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வருகிற 16ம்தேதி (திருவள்ளுவர் தினம்), 25ம்தேதி வடலூர் ராமலிங்க சுவாமிகள் நினைவு நாள் மற்றும் 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய 3 நாட்கள் அரசு விடுமுறையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த டாஸ்மாக் பார்கள் மூடப்படும்.
மேலும், ஓட்டல் பார்களிலும் மதுபான விற்பனை இருக்காது. மேற்கண்ட நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்