Rock Fort Times
Online News

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.54 லட்சம்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.54 லட்சம்…

ஒரு கிலோ தங்கமும் கிடைத்தது

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் அவ்வப்போது திறந்து எண்ணப்படும். இந்நிலையில் கோவில் மண்டபத்தில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில், தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரூ. 54,17,434 ரொக்க பணமும்,1 கிலோ 406 கிராம் தங்கமும் மற்றும் 2 கிலோ 619 கிராம் வெள்ளியும், 38 வெளிநாட்டு பணமும், 209 நாணயங்களும், மேலும், ரூ.81,530-ம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்திருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்