Rock Fort Times
Online News

திருச்சியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி- யார் அவர்? போலீசார் விசாரணை

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் குமாரமங்கலம் ரெயில் நிலையத்திற்கும், திருச்சி ரெயில் நிலையத்திற்கும் இடையே உடையான் பட்டி ரெயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ரெயிலில்  அடிபட்டு அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த வாலிபர் சிமெண்ட் கலரில் கருப்பு கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், ஊதா கலரில் வெள்ளை கட்டம்போட்ட கைலியும் அணிந்திருந்தார். அவரது இடது மார்பில் எம்.ஏ. என பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்த வாலிபரின் உடலை திருச்சி இருப்புபாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் இறந்த வாலிபர் யார்? என்பது குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்