Rock Fort Times
Online News

குழந்தை கடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய பெண் கைது…!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் குழந்தை கடத்தப்பட்டதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்பேரில், எஸ்.வி.மங்கலம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,
குழந்தை எதுவும் கடத்தப்படவில்லை யாரோ திட்டமிட்டு வதந்தி பரப்பியது தெரிய வந்தது. மேலும், வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், நெற்குப்பை அருகேஉள்ள ஒழுகமங்கலத்தைச் சேர்ந்த ஆனந்தவள்ளி(45) என்ற பெண் வதந்தி பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து
அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், சமூகவலைதளங்களில் குழந்தை கடத்தப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் எச்சரித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்