திருச்சி,திருவானைக்காவல் கொண்டயம்பேட்டை சாலை, மயானம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி, திம்மராய சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் மணியரசன் மற்றும் ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு இறந்து கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி . அந்தபகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் குறித்த முழு விவரம் தெரியவில்லை. இதையடுத்து, போலீசார் அந்த வாலிபர் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த ஸ்ரீரங்கம் போலீசார் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.