ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 31-ம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை விடுமுறை தினம் என்பதால் இன்று (30.10.2024) திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதேபோல திருச்சி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில், மண்டல பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன் தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு.அன்பழகன் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, உதவி ஆணையர் (பணிகள்) த.சசிகலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Comments are closed.