Rock Fort Times
Online News

திருச்சி எம்.பி. சிவா வீடு மீது தாக்குதல்- நேரு ஆதரவாளர்கள் 4பேர் சஸ்பென்ட்

 திருச்சி கண்டோன்மெண்ட் நியூ ராஜா காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானத்தை அமைச்சர் நேரு இன்று திறந்து வைத்தார்.இந்த திறப்பு விழா கல்வெட்டில் எம்.பி.சிவா பெயர் சேர்ப்பது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் அமைச்சர் நேருவுக்கு கருப்பு கொடி காட்டினர். இச்சம்பவத்தை தொடர்ந்து எம்.பி.சிவா வீட்டில் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கார்இ இருசக்கர வாகனம்இ மின்சார விளக்குகளை அடித்து நொறுக்கினர்.இது தொடர்பாக திருச்சி நீதிமன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரு தரப்பிலும் அளித்த புகாரின் பேரில் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும்இ மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய் திமுக துணைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான முத்துச்செல்வம், அந்தநல்லூர் ஒன்றிய தலைவரும் மாவட்ட பொருளாளருமான துரைராஜ், 55வது வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ராம்தாஸ் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

   

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்