Rock Fort Times
Online News

திருச்சியில் மேயர் மு.அன்பழகன் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் பீமநகர், வடக்கு எடத்தெரு, தேவர் புதுதெரு , பொன்விழா தெரு ஆகிய பகுதிகளில் திருச்சி மேயர் மு.அன்பழகன், மண்டலத் தலைவர் திருமதி.த. துர்கா தேவி , உதவி ஆணையர் திரு.ச.நா. சண்முகம், உதவி செயற்பொறியாளர் திரு.கே.எஸ். பாலசுப்பிரமணியன் ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து அடிப்படை வசதிகளை கேட்டு அறிந்து ஆய்வு மேற்கொண்டனா். அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி,மழைநீர் வடிகால்,குடிநீர் அடி பம்பு அமைத்து தர கோரிக்கை வைத்தனா். அதனை உடனடியாக செய்து தர அலுவலருக்கு மேயர் உத்தரவிட்டார். மேலும், பொன்விழா தெருவில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு பணியினை விரைந்து முடித்து தரும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும் குறிஞ்சி நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதியில் குடியிருப்பு நல சங்கத்தினர் மேயாிடம் மனு அளித்தனா். மேலும் அப்பகுதியில் குடியிருப்பு நல சங்கத்தினருடன் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

மேலும் இந்த கூட்டத்தில் குடியிருப்பு நலச் சங்கத்தினர் தங்கள் பகுதயில் நடைபெற்று வரும் புதைவடிகாள் திட்ட பணிகளை விரைந்து முடித்து தரவும்,சாலை அமைத்து தரவும், பூங்கா புதிதாக அமைத்து தரவும் ஆலோசனை நடைபெற்றது. மாண்புமிகு மேயர் அவர்கள் குடிநீர் கூடுதல் நேரம் கொடுக்கும்படி பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிக்கப்பட்டவுடன் சாலைகள் அமைத்து தருவதாக உத்தரவு அளித்ததை ஏற்றுக்கொண்ட குடியிருப்பு நல சங்கத்தினர், மேயருக்கு நன்றியை தெரிவித்தனா். குடியிருப்பு நலச்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல தலைவர் திருமதி. துர்கா தேவி, உதவி ஆணையர் திரு. ச.நா. சண்முகம் ,உதவி செயற்பொறியாளர் திரு.கே.எஸ். பாலசுப்பிரமணியன் மற்றும் குடியிருப்பு நல சங்க தலைவர், செயலாளர்கள் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்