திருச்சி சிட்டி பகுதியில் நாளை(03-01-2025) மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி இ.பி. ரோடு துணை மின்நிலையத்தில் நாளை( வெள்ளிக்கிழமை) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இ.பி. சாலை, மணிமண்டப சாலை, காந்தி மார்க்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோகநாதா் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணாபுரம் சாலை, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, பட்டா்வொர்த் சாலை, கீழஆண்டாா் வீதி, மலைக்கோட்டை, மேலரண் சாலை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, நகர ரெயில் நிலையம், விஸ்வாஸ் நகா், வேதாத்ரி நகா், ஏ.பி. நகா், லட்சுமிபுரம், உக்கடை ஆகிய பகுதிகளில் நாளை ஜன. 3 ந் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.