திருவாரூர் நகர மன்ற திமுக துணைத் தலைவராக பதவி வகித்து வருபவர் அகிலா சந்திரசேகர். இவரது மகன் ஆகாஷ். இவர் படிப்பு மற்றும் வேலை சம்பந்தமாக சென்னை வளசரவாக்கத்தில் தங்கி இருந்தார். அப்போது அவர் இளம் பெண்கள் பலருடன் நட்பு கொண்டு அதிகளவு செலவு செய்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ஆகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆகாஷ் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகி மலைக்கோட்டை ஐயப்பனின் மகள் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.