Rock Fort Times
Online News

தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் 2014ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தன்னை பணியில் இருந்து விடுவிக்கும் படி திடீரென தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எஸ்பி அருண் ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. எஸ்பி அருண் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்