Rock Fort Times
Online News

 திருச்சி கொள்ளிடம் ஆறு மணல் குவாரியில்  பிணமாக கிடந்த வாலிபர்..

திருவானைக்காவல் அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 34). இவர் கடந்த 27-ந் தேதி மதியம்  வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.  இந்நிலையில் நேற்று ( 29.05.2023 ) ஸ்ரீரங்கம் பொன்னுரங்கபுரம் மணல் குவாரியில் தினேஷ்குமார் பிணமாக  கிடப்பதாக   போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்  வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். பின்னர் , இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்?, அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்று  காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்