Rock Fort Times
Online News

திருச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுக்கான பயிற்சி..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் , தமிழகத்தில் திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ 7, 8, 9-ம் வகுப்புகள் மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெறுவதற்கு 6, 7, 8-ம் வகுப்புகளில் சேர்க்கையும் நடக்கிறது. இதற்காக மாணவ-மாணவிகளுக்கு அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 24-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. மாணவர்களுக்கான போட்டிகளாக தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஆக்கி, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபடி, மேஜைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல் போட்டிகளும் நடக்கிறது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் 2023-24-ம் ஆண்டு விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர்வதற்கான படிவங்களை Www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 23-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்